Thursday 2nd of May 2024 01:55:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் தாதியர்கள், பொலிஸார் உட்பட்ட 18 பேருக்கு கொரோனா!

மன்னாரில் தாதியர்கள், பொலிஸார் உட்பட்ட 18 பேருக்கு கொரோனா!


மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் இருவர், மன்னார் பொலிஸார் மூவர் உட்பட்ட மன்னாரைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எமக்குத் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

399 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 11 பேருக்கும் அவர்களை விட மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் இருவர், ஊழியர்கள் இருவர் என வைத்தியசாலையைச் சேர்ந்த நால்வர் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸார் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE